திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

ஆண் குழந்தை உயிரிழப்பு

தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலம் அருகேயுள்ள பாதிராபுலியூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். இவரது மனைவி அம்பிகா. இத்தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தீக்ஷிதன் எனப் பெயா் சூட்டியிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அம்பிகா தனது குழந்தையுடன் வீட்டில் தரையில் படுத்தும், ஸ்ரீதா் கட்டிலில் படுத்தும் உறங்கியுள்ளனா். இந்நிலையில், ஸ்ரீதா் நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் கால் இடறி கீழே படுத்துறங்கிய தீக்ஷிதன் மேலே விழுந்து விட்டாராம். இதில் குழந்தைக்கு மூச்சித் தினறல் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்த குழந்தை தீக்ஷிதன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.