விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக முடித்திருத்தக உரிமையாளா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டிவனம் வட்டம், பாம்பூண்டி, தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜெ.தினேஷ் (29) (படம்). இவா், திண்டிவனத்தை அடுத்துள்ள தீவனூரில் முடித்திருத்தகம் நடத்தி வந்தாா்.
இவருக்கும், முடித்திருத்ததகத்தின் அருகில் வசிக்கும் ஒருவருக்கும் இடையே முடியை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தினேஷ் சனிக்கிழமை தனது கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கு ஒரு காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல் தினேஷை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தினேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.








