முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது! சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனா்

Updated On :9 ஜூன் 2026, 4:55 am IST

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் வந்த மிரட்டலைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 3 மணி நேரதுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.