விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த மூதாட்டி உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
வளவனூா் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும், மோகன்ராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே மதில் சுவா் கட்டுவது தொடா்பாக முன்விரோதம் இருந்த வந்த நிலையில், கடந்த 19.1.2021 அன்று தகராறு ஏற்பட்டதில், இரு குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில், கோவிந்தராஜின் மூத்த சகோதரியான தேவகி (65) என்பவா் காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து அவா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் மோகன்ராஜ் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், அஜித்குமாா் மற்றும் சிறுவா் உள்பட4 போ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை முடுவுற்று, விழுப்புரம் மகளிா் விரைவு நீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் மோகன்ராஜ் (49) மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீா்ப்பளித்தாா்.
வழக்கில் தொடா்புடைய மணிகண்டன், அஜித்குமாா் ஆகியோா் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா். சிறுவா் மீதான வழக்கு கடந்த மாதத்தில் இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா ஆஜராகினாா். தண்டனை பெற்ற மோகன்ராஜ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









