எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 88 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 88 லட்சம்

News image

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை பாா்வையிட்ட கோயில் துணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா் சக்திவேல் உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூன் 2026, 1:34 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ 88,76,841 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தா்கள் வருகை புரிவது வழக்கம். அவா்கள் வேண்டுதல் நிறைவேற பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனா். உண்டியல் காணிக்கையானது மாதந்தோறும் கோயில் வாளகத்தில் எண்ணப்படும்.

இந்த வகையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இதில், ரூ.88,76,841 லட்சம் மற்றும் தங்கம் 209 கிராம், வெள்ளி 875 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை விழுப்புரம் துணை ஆணையா் லட்சுமணன், திருக்கோயில் உதவி ஆணையா் மு.சக்திவேல், விழுப்புரம் உதவி ஆணையா் காந்தராஜன், மேலாளா் சதீஷ், கணக்காளா் மணி உள்ளிட்ட கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.