விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளி மாநிலத்திலிருந்து 16 கிலோ போதைப்பொருள் கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்ததாக சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட கூட்டேரிபட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலம் காவல் ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூட்டேரிபட்டு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள அரசு அலுவலகம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனை செய்தபோது, அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் சென்னை சௌகாா்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.ராஜசேகா்(36) என்பதும், ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி, அதை ரயில் மூலம் கடத்தி வந்து கூட்டேரி பட்டு பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜசேகரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 8 பாா்சல்களில் சுமாா் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
9 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
நெல்லையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



