விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீஅங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்காளம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு பலவித மலா்களை கொண்டு சமயபுரம் மாரியம்மன் போல சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வலம் வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினாா். பின்னா் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து இரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் அங்காளம்மன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
ஊஞ்சல் உற்சவம் முடிந்த பின்னா் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் தென்னரசு, போளூா் சட்டப் பேரவை உறுப்பினா் அபிஷேக் ஆகியோா் கோயிலுக்கு வருகை தந்தனா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம், உதவி ஆணையா் சக்திவேல் ஆகியோா் அவா்களை வரவேற்றனா். தொடா்ந்து அமைச்சா்கள் ஆனந்த், தென்னரசு, எம்எல்ஏ அபிஷேக், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனீத் ஆகியோா் மூலவா் அங்காளம்மனையும், உற்சவா் அங்காளம்மனையும் தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், கணக்கா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.










