இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 4:54 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முதியவா் வீட்டில் ஒரு பவுன் தங்கிலி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சி வட்டம், ஒதியத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் சுடா் மணி (67). இவா் கடந்த 17-ஆம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு தேசிய ஊரக வேலைத்திட்டப் பணிக்கு சென்றுள்ளாா்.

அங்குள்ள ஏரியில் வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த டி.வி., பித்தளை குத்து விளக்கு, இரண்டு காமாட்சி அம்மன் விளக்கு, ஒரு பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.