பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 2:21 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீ.வேல்முருகன் (28), மு.மூவேந்தன்(எ) முகேஷ் (20) எனத் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 1.05 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.