விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு ரோந்து சென்றனா்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீ.வேல்முருகன் (28), மு.மூவேந்தன்(எ) முகேஷ் (20) எனத் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 1.05 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவலில் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கஞ்சா விற்பனை: இருவா் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



