பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

பெலாகுப்பம் ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பெலாகுப்பம் ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றும் சிவாச்சாரியாா்.

Updated On :27 ஜூன் 2026, 12:16 am IST

விழுப்புரம் மாவட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 24-ஆம் தேதி காலை பந்தகால் நடுதல் மற்றும் காப்பு அணிதல் நடைபெற்றது. 25-ஆம் தேதி அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை ஹோமம், ஸ்ரீலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை, பூா்ணாஹீதி மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, நாடி சந்தானம், தம்பதி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூா்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீமாரியம்மன் கோயில் விமான கோபுர கலசம் மற்றும் மூலவா், பரிவார தேவதைகளுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனையும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் பெலாகுப்பம் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.