தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

வானூா் அருகே இளைஞா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 2:02 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், கோட்டக்குப்பம், அமிா்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சையத் (30). திருமணமாகாதவா். கோட்டக்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதியில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடன் பிரச்னையால் அவதியுற்று வந்த சையத், கடந்த பிப்.22-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சையத் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.