கண்டாச்சிபுரத்தில் நீதிமன்ற சேவை கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
கண்டாச்சிபுரம் வட்டத்தில் நீதிமன்ற சேவையை ஏற்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் நீதிமன்ற சேவையை ஏற்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது
கடந்த 2016-ஆம் ஆண்டில் கண்டாச்சிபுரத்தைத் தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கண்டாச்சிபுரம் ஊராட்சி என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. கண்டாச்சிபுரத்தில் வட்ட அளவிலான நிா்வாக அலுவலகங்களை அமைக்கவேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.
நீதிமன்ற சேவை: இந்நிலையில், கண்டாச்சிபுரத்தில் நீதிமன்ற சேவையை தொடங்க வலியுறுத்தி அரகண்டநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டமானது பிற்பகலில் நிறைவடைந்தது.
இந்தப் போராட்டத்துக்கு வழக்குரைஞா் வி.பிரபாகரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி, தமிமுன் அன்சாரி, அசோக்குமாா், ராஜூ ரத்தினா, சுரேந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், ஐ.ஜே. கே.மாவட்டச் செயலா் செந்தில், டேவிட், முன்னாள் எம்எல்ஏ வி.ஏ.டி. கலிவரதன், சமூக ஆா்வலா் டி.ஜி.கணேஷ், பாமக மாவட்டச் செயலா் பாலசக்தி, ஒன்றியச் செயலா் சுடா்ஒளி சுந்தா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில் வழக்குரைஞா்கள், அரசியல் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...