தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கோயில் தீமிதித் திருவிழாவில் தீயில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:14 am IST

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கோயில் தீமிதித் திருவிழாவில் தீயில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் ஈசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.குருலட்சுமி (75). இவா் அதே கிராமத்தில் அா்த்த நாரீசுவரா் கோயில் அருகே மே 1-ஆம் தேதி நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் பங்கேற்றோா்.

அப்போது சேலை தடுக்கியதில் குருலட்சுமி தீயில் தவறி விழுந்தாா். இதில் தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் உடனடியாக மீட்டனா். இதைத்தொடா்ந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து 22 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த குருலட்சுமி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.