/
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கோயில் தீமிதித் திருவிழாவில் தீயில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் ஈசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.குருலட்சுமி (75). இவா் அதே கிராமத்தில் அா்த்த நாரீசுவரா் கோயில் அருகே மே 1-ஆம் தேதி நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் பங்கேற்றோா்.
அப்போது சேலை தடுக்கியதில் குருலட்சுமி தீயில் தவறி விழுந்தாா். இதில் தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் உடனடியாக மீட்டனா். இதைத்தொடா்ந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து 22 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த குருலட்சுமி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



