இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:44 am IST

திண்டிவனம் அருகே வயிற்று வலியால் விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், சலவாதி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏழுமலையின் மனைவி நவநீதம் (50). நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், கடந்த 20-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து நவநீதத்தை குடும்பத்தினா் மீட்டு, திண்டிவனத்திலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.