விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை (மே 29) வெளிநடப்பு செய்துள்ளனர்.
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மே 29 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கூட்டரங்குக்கு வந்தார். அப்போது விவசாயிகள் கூட்டத்தை நடத்தக் கூடாது என்றும், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் கூட்டத்தை வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர்.
மேலும் தலையில் முக்காடு அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு விவசாயிகள் அமர்ந்து முழக்கமிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தலையில் முக்காடு அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு முழக்கமிட்ட விவசாயிகள். - தினமணி
Summary
Farmers staged a walkout from the grievance redressal meeting held at the Villupuram District Collector's office on Friday (May 29).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










