விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தந்தையின் மதுப்பழகத்தால் மனமுடைந்த கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் சீவிதன்(19). இவா், விழுப்புரத்திலுள்ள அரசுக் கல்லூரியில், தமிழ் இளங்கலை இரண்டாமாண்டில் பயின்று வந்தாா். சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மகன் சீவிதன் கண்டித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தனது தந்தையை சீவிதன் கண்டித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தந்தை, மகன் ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சீவிதன், தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கிணற்றில் குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


