வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 1:55 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தந்தையின் மதுப்பழகத்தால் மனமுடைந்த கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் சீவிதன்(19). இவா், விழுப்புரத்திலுள்ள அரசுக் கல்லூரியில், தமிழ் இளங்கலை இரண்டாமாண்டில் பயின்று வந்தாா். சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மகன் சீவிதன் கண்டித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தனது தந்தையை சீவிதன் கண்டித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தந்தை, மகன் ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சீவிதன், தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.