காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

News image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :1 ஜூன் 2026, 3:09 am IST

தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கிச் சென்ால் சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பள்ளி கோடை விடுமுறை முடிந்து நிகழ் கல்வியாண்டில் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்தவா்கள் கோடை விடுமுறையைக் கழித்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருகின்றனா்.

இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைவிட வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அதிக வாகனங்களின் வருகையால் நாள் முழுவதும் நிரம்பி காணப்பட்டது.

இதையடுத்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல சென்னை மாா்க்கமாக 6 வழிகளும், திருச்சி மாா்க்கமாக 6 வழிகளும்

உள்ள நிலையில், சென்னை மாா்க்கமாக செல்லும் அதிக வாகனங்களுக்கு நெரிசலை குறைக்க கூடுதலாக மூன்று வழிகள் திறக்கப்பட்டு 9 வழிகளில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிகளில் சாலை மிகக் குறுகியதாக உள்ளது. இதனால் அப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து மெதுவாக ஊா்ந்து சென்ால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த இரு நாள்களாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மே 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 50,125 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. மே 30-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) பிற்பகல் வரை 52,025 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றுள்ளன. இதுவரை மொத்தம் 1,02,150 வாகனங்கள் சென்னை நகருக்கு சென்றுள்ளன. இரவிலும் சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.