ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

சாகுபடி முறையை இயந்திரமயமாக்கினால் கூடுதல் லாபம் பெற முடியும்

விவசாய சாகுபடி முறையை இயந்திரமயமாக்கினால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்.

Updated On :13 மே 2013, 12:45 am IST

விவசாய சாகுபடி முறையை இயந்திரமயமாக்கினால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உழவர் பெருவிழா சனிக்கிழமை நடந்தது. விழாவுக்கு, தலைமை வகித்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் பேசுகையில், "விவசாய உற்பத்தியைப் பெருக்க உயர்ந்த தொழில்நுட்பங்களை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்பது பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காகவே இதுபோன்ற உழவர் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

குறைந்த பரப்பளவில் அதிக விளைச்சல் பெருக்குவது குறித்தும் இங்குள்ள கண்காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது' என்றார்.

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது, "உழவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் வீட்டு காய்கறித்  தோட்டம் எவ்வாறு அமைப்பது என்பது பற்றி தெளிவாக காண்பித்துள்ளனர்.

இது தவிர எலி ஒழிப்பது எப்படி?, பயிர்களுக்கு வரும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகள் பற்றி கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளது.

வேளாண் சாகுபடியில் விவசாயிகள் இயந்திரமயமாக்கிட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்' என்றார்.

வேளாண் இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், அதிமுக நகரச் செயலர் குமரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவவர் மணிமேகலை பழனிச்சாமி, நகர்மன்ற துணைத் தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.