கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிகளை இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசால் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. இந்த மடிக் கணினியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வரும் சாதி, வருமானச் சான்றுகள் உள்ளிட்டவை கோரி வரும் விண்ணப்பங்களைச் சரி பார்த்து அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து வந்தனர். ஆனால், இதுவரையில் அதற்கான இணையதளக் கட்டணம் வழங்கப்படவில்லையாம்.
 எனவே, இணையதளச் செலவினத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணினிகளை அந்தந்த வட்டாட்சியர்களிடம் ஒப்படைப்பது என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
 அதன்படி, மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட 10 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது மடிக் கணினிகளைத் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் புதன்கிழமை அவர்கள் விடுப்பு எடுத்து, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான கிராமங்களில் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com