விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் அடக்கம்

வடலூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைப் பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் போலீஸார் புதன்கிழமை அடக்கம் செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:59 am

DIN

வடலூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைப் பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் போலீஸார் புதன்கிழமை அடக்கம் செய்தனர்.
வடலூர் அடுத்துள்ள கொளக்குடி கிராம ஏரியில் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை அந்த வழியே சென்றவர்கள் கண்டனர். இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஏழுமலை ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினர் மூலம் மீட்டனர்.
இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.  வடலூர் சபையில் தங்கியிருந்தவராக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால், வடலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் உதவியுடன் போலீஸர் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.