விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து பூமா கோயில் எதிரே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:23 am

தினமணி

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து பூமா கோயில் எதிரே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், மாதந்தோறும் ஊதியத்தைக் கடைசி வேலைநாளன்று வழங்க வேண்டும். ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும். பணிநிரவலைக் குறித்த காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்திரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 10-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 11-ஆம் தேதி பூமா கோயில் எதிரே கருப்பு வில்லை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தலைமை வகித்துப் பேசியதாவது: பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். அக்டோபர் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) கோரிக்கைகளை வலியுறுத்தி, பூமா கோயில் வளாகத்தில் கண்டனக் கூட்டம் நடைபெறும். அப்போது, ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வேந்தருக்கு (ஆளுநர்) கோரிக்கைகளை வலியுறுத்தி, தனித் தனியாக கடிதம் எழுத உள்ளனர் என்றார்.
 போராட்டத்தில் ஆசிரியர்கள் சங்கங்களின் தலைவர்கள் உதயசந்திரன், சிவகுருநாதன், பக்கிரிசாமி, பூங்கோதை, இமயவரம்பன், பாஸ்கர், சுப்பிரமணியன், ஜெயலஷ்மி, தனசேகர், முத்துவேலாயுதம், செல்வராஜ், செல்வகுமார், ஜெய்சங்கர், வேல்ராஜ், புருஷோத்தமன், தன்ராஜ் , காமராஜ், செங்கல்வராயன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.