பண்ருட்டி அருகே கார் மோதியதில் கல்லூரி மாணவிகள் இருவர் காயமடைந்தனர்.
விருத்தாசலம் வட்டம், திருவம்பர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் இந்துமதி. பண்ருட்டி வட்டம், நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் மகள் பிரியதர்ஷினி. இவர்கள் இருவரும், பண்ருட்டியில் உள்ளே அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்குச் செல்ல சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்டு, புதுச்சேரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

கோவிந்த்புரி தீ வைப்பு சம்பவம்: கைதானவா் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள்






