புவனகிரி அருகே இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் தந்தையும், மகனும் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி கோட்டைமேட்டுத் தெருவில் வசித்து வந்த கணேசன் மகன் குருசேவ் (29). இவர் தனது உறவினரான நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அபினாஷ் (20) என்பவருடன், தனது சொந்த ஊரான புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றார்.
அங்கு குருசேவ் தனது சித்தப்பா விஜயனுடன் (58) சொத்துப் பிரச்னை தொடர்பாக பேசியபோது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயன், அவரது மகன் கோபி (24) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாள், இரும்புக் கம்பியால் குருசேவை தாக்கினர். இதை தடுக்க முயன்ற அபினாஷும் தாக்கப்பட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய விஜயன், கோபி ஆகிய இருவரும் புவனகிரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை காலை சரணடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

