/

ஊராட்சிகளில் இன்று தூய்மைப் பணி மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல் 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கேட்டுக்கொண்டார். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:26 am IST

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கேட்டுக்கொண்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூய்மை இந்தியா கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் புதன்கிழமை முழுமையான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து வீடுகளிலும், கழிப்பறை கட்டி முடிக்காத ஊராட்சிகளில் இந்தப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டி முடிக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் தூய்மை இந்தியா திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தன்னார்வ நோக்குடன் ஊராட்சிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதுடன் கழிப்பறைகளுக்கான குழிகள் எடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரம், கழிப்பறைகள் பயன்படுத்துதல் தொடர்பான பேரணிகள் நடத்தி வீடு,வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டு என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.