டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

என்.எல்.சி.க்கு நிலம் கையகத்துக்கு எதிர்ப்பு

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து, வாணாதிராயபுரம் கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:53 am IST

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து, வாணாதிராயபுரம் கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் தனது 3-ஆவது சுரங்கத்தை விருத்தாசலம், புவனகிரி பகுதிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது. 
இதற்காக, வீடு,  நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், என்எல்சி விரிவாக்கத்துக்கு தங்களது வீடு, நிலங்களை வழங்க மாட்டோம் எனக் கூறினர். இதுதொடர்பாக, நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம் பகுதிகளில்  கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில், நெய்வேலி, சுரங்கம் 1ஏ அருகே உள்ள வாணாதிராயபுரம் கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்துக்கு தங்களது நிலங்களை தர மறுத்து, அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்களது கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.