கடலூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் டி.மணிவாசகம் தலைமையில் ஒரு பிரிவாகவும், எம்.சேகர் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த மோதல் போக்கு கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி சங்கத்திலும் நிலவுகிறது. இதுதொடர்பாக அண்மையில் திட்டக்குடியில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் திட்டக்குடி வட்டாட்சியர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டி, டி.மணிவாசகம் தரப்பினர் திங்கள்கிழமை கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புத் தலைவர் என்.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் கே.வெங்கடேசன், பி.ஜெயராஜ், பொருளர் என்.சுந்தர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலர் டி.மணிவாசகம், மாவட்டத் தலைவர் பி.துரை, பொதுசெயலர் வி.குளோப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


