சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

கடலூரில் ஏஐடியுசி  தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

கடலூரில் ஏஐடியுசி  தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் டி.மணிவாசகம் தலைமையில் ஒரு பிரிவாகவும், எம்.சேகர் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த மோதல் போக்கு கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி சங்கத்திலும் நிலவுகிறது. இதுதொடர்பாக அண்மையில் திட்டக்குடியில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் திட்டக்குடி வட்டாட்சியர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டி, டி.மணிவாசகம் தரப்பினர் திங்கள்கிழமை கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புத் தலைவர் என்.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் கே.வெங்கடேசன், பி.ஜெயராஜ், பொருளர் என்.சுந்தர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலர் டி.மணிவாசகம், மாவட்டத் தலைவர் பி.துரை, பொதுசெயலர் வி.குளோப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.