ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

கடலூரில் 2 -ஆவது நாளாக மழை

கடலூரில் 2- ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On :7 ஜூன் 2018, 9:20 am IST

கடலூரில் 2- ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 கடந்த மே 28 -ஆம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் கடலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. உச்சபட்சமாக மே 29-ஆம் தேதி 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.
 இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை திடீரென மேகங்கள் சூழ்ந்து சிறிது நேரம் மழை பெய்தது.
 தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், புதன்கிழமை மாலை கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, கடலூரில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.