கோரிக்கையை வலியுறுத்தி, திட்டக்குடி காவல் நிலையத்தை பா.ம.க.வினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர்.
திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், திட்டக்குடியில் தனியார் தையல் பயிற்சிப் பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 16-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அந்த பெண் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரில், தி.இளமங்களத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாராம். எனினும், புகாரின் மீது திங்கள்கிழமை வரை காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், திட்டக்குடியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அந்தப் பெண்ணின் தந்தை முறையிட்டாராம். இதனையடுத்து கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் அசோக்குமார், மாவட்டச் செயலர் சுரேஷ், வன்னியர் சங்கச் செயலர் மோகன், திட்டக்குடி தொகுதி அமைப்பாளர் தனபால் ஆகியோர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரின் நிலை குறித்து கேட்டனராம். ஆனால், போலீஸார் அளித்த பதிலில் திருப்தியடையாத கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் சூரக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவ்வாய்க்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








