சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருக்கழிப்பாலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம், மனுநீதி நாள் முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:02 am

தினமணி

சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருக்கழிப்பாலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம், மனுநீதி நாள் முகாம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. இதில், அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
 சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலை வகித்துப் பேசினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
 வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 அதேபோல, மாதந்தோறும் ஒவ்வோர் ஊராட்சிக்கும் அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.
 இந்த முகாமில் பெறப்பட்ட 936 மனுக்களில் 598 மனுக்கள் ஏற்கப்பட்டன. 22 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 316 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முகாமில் மொத்தம் 517 பயனாளிகளுக்கு ரூ. 58,42,445 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
 முகாமில் வேளாண் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
 கவரப்பட்டு ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பி.சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், துணை ஆட்சியர்கள் எஸ்.கணேஷ், வி.பி.ஜெகதீஸ்வரன், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவகர்லால் பாபு, மாவட்ட வழங்கல் அலுவர் தினேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலவர் ரதி, சிதம்பரம் வட்டாட்சியர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.