மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இரு தரப்பினர் மோதல்: 4 பேர் காயம்

பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

Updated On :14 மே 2018, 11:05 pm

பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டி வட்டம், பைத்தாம்பாடி சத்திரம் கிராமத்தில் விநாயகர் கோயில் அருகே மளிகைக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வந்த பைத்தாம்பாடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்பேத்கர் என்பவர் அங்கிருந்தவர்களை அவதூறாகப் பேசினாராம். இதை பைத்தாம்பாடி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (53) என்பவர் கண்டித்தாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அம்பேத்கர், அவரது தம்பிகள் அன்பரசு, விக்னேஷ் மற்றும் சபரிநாதன் ஆகியோர் ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏழுமலையின் ஆதரவாளர்களும், அம்பேத்கரின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டதில், ஏழுமலை, அன்பரசு, விக்னேஷ், சபரிநாதன் ஆகியோர் காயமடைந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸார் 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.