மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மு.க.ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வியாழக்கிழமை சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :25 மே 2018, 4:24 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வியாழக்கிழமை சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலகம் முன் வியா ழக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 கடலூர்: கடலூரில் திமுகவினர் நகர அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று பாரதிசாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்பட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் திமுக மேற்கு மாவட்டச் செயலர்
 சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒன்றியச் செயலர் தண்டபாணி உள்பட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
 திட்டக்குடி: திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலர் அமிர்தலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 வடலூர்: வடலூர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலர் சிவக்குமார் தலைமையில் சுமார் 30 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, மந்தாரக்குப்பம், வானமாதேவி கூட்டுச் சாலை அருகே, கம்மாபுரம் ஒன்றிய திமுக செயலர் திருமால்வளவன் தலைமையில் 23 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
 நெய்வேலி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நெய்வேலி ஆர்ச் கேட் அருகே எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், நெய்வேலி நகரிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நடராஜன், கருப்பன், ஊராட்சி செயலர் சபா.பாலமுருகன் உள்ளிட்ட 200 பேர் மறியலில் பங்கேற்றனர். இவர்களை நெய்வேலி நகரிய போலீஸார் கைது செய்து, வட்டம் 20-இல் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
 காட்டுமன்னார்கோவில்: மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் திமுக சார்பில் ஒன்றியச் செயலர் முத்துசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், அவைத் தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன், மாறன், செல்வம், சொர்ணம், அறிவு, பூக்கடை செந்தில், பழஞ்சநல்லூர் பாஸ்கர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.