சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.10 லட்சம் நிதியை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஒதுக்கீடு செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் காவல் துறைக்கு உறுதுணையாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றார். மேலும் இந்தப் பணியை மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தி, குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்திட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


