சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தீபாவளி சீர்வரிசை பிரச்னை: பெண் தீக்குளித்து தற்கொலை

தீபாவளி சீர்வரிசை பிரச்னையால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:48 am IST

தீபாவளி சீர்வரிசை பிரச்னையால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
 விருத்தாசலம் அருகே உள்ள நெய்வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (28). இவருக்கும், கோ.பவழக்குடி காலனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பியதோடு, இங்கு ஓட்டுநர் வேலைபார்த்து வருகிறார்.
 இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுமணத் தம்பதியினருக்கு பரமேஸ்வரி வீட்டிலிருந்து சீர்வரிசை செய்துள்ளனர். அதில், குறைவான பொருள்களே வழங்கியதாக ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தெரிவித்தனராம்.
 இதனால், பரமேஸ்வரி மனவேதனையில் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலில் தீக் காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 சம்பவம் குறித்து விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.