மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கடலூரில் ரூ.30 ஆயிரம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :8 அக்டோபர் 2018, 9:16 am IST

கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்திட உணவு பாதுகாப்பு துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நா.தட்சணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சனிக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, போடிசெட்டித்தெருவில் உள்ள ஏஜென்ஸிக்கு சரக்குகள் கொண்டு வரப்பட்ட தகவல் கிடைத்ததும், அங்கு சோதனை மேற்கொண்டனர். அதில், 3 பெட்டிகளில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அதன் மாதிரியை சேகரித்து கோவையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனர்.
 உணவு பகுப்பாய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை என்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது ஆதாரங்களுடன் உணவு பாதுகாப்புத் துறை வழக்கு தொடரும். இந்த வழக்கில் தொடர்புடையோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.