ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கடலூரில் ரூ.30 ஆயிரம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :8 அக்டோபர் 2018, 9:16 am IST

கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்திட உணவு பாதுகாப்பு துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நா.தட்சணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சனிக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, போடிசெட்டித்தெருவில் உள்ள ஏஜென்ஸிக்கு சரக்குகள் கொண்டு வரப்பட்ட தகவல் கிடைத்ததும், அங்கு சோதனை மேற்கொண்டனர். அதில், 3 பெட்டிகளில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அதன் மாதிரியை சேகரித்து கோவையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனர்.
 உணவு பகுப்பாய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை என்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது ஆதாரங்களுடன் உணவு பாதுகாப்புத் துறை வழக்கு தொடரும். இந்த வழக்கில் தொடர்புடையோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.