குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மீண்டும் சேதமடைந்த கெடிலம் சாலை!

கடலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழைக்கு கெடிலம் ஆற்றங்கரை சாலை மீண்டும் சேதமடைந்துவிட்டது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:54 am IST

கடலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழைக்கு கெடிலம் ஆற்றங்கரை சாலை மீண்டும் சேதமடைந்துவிட்டது.
 கடலூர் பேருந்து நிலையம் அருகே கெடிலம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் சாலை அமைத்து பேருந்து நிலையம் - கம்மியம்பேட்டை இடையே போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.4.46 கோடியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையானது நெடுஞ்சாலைத் துறையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உள்ளூர் திட்டக் குழுமத்தால் அமைக்கப்பட்டதாகும்.
 ஆனால், இந்தச் சாலையை எந்தத் துறை பராமரிப்பது என்ற கேள்வி எழுந்தபோது நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, நகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக் குழுமம் ஆகிய எந்தத் துறையும் பொறுப்பேற்கவில்லை. இந்தச் சாலையானது கடந்த 2015-ஆம் ஆண்டில் பெய்த பெருமழையால் பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியது. கடலூர் புறவழிச் சாலையாக செயல்பட்டதால் இந்தச் சாலை சேதத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 எனவே, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு, போராடியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.2.26 கோடியில் இந்தச் சாலை 2017-ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், சில மாதங்களிலேயே மீண்டும் சேதமடைந்ததைத் தொடர்ந்து தனியார் நிதி பெற்று உள்ளூர் திட்டக்குழுமம் மூலமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.30.80 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.
 ஆனால், இந்தச் சாலையும் கடலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்தது. சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆங்காங்கே பள்ளமாக மாறி விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
 இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர் கூறியதாவது:
 சாலை அமைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே, இந்தச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததா என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நிதி ஒதுக்கீடு பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சாலையை பராமரிக்க முடியும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.