கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவை அறிந்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் அறுவடையாகும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்திட ஏதுவாக 41 நெரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஜூலை மாதம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்து வந்தன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் மாதத்துடன் கொள்முதலை நிறுத்திக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உழவர்மன்ற கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கூறியதாவது: காட்டுன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களில் விவசாயிகள் நெல் அறுவடையை தொடக்கி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துள்ளதால், கொள்முதல் நிலையங்களுக்கு வந்த விவசாயிகளின் நெல் முழுவதும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதை ஏற்க முடியாது. எனவே, தமிழக அரசு தலையிட்டு விளைந்துள்ள நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறுகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் விவசாயிகளின் தேவை அறிந்து மீண்டும் திறந்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வழக்கம்போல நெல்லினை அங்கு வழங்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

