இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கேட்டுக் கொண்டார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், "தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி' கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து கண்காட்சியைத் திறந்துவைத்தார். பின்னர், கருத்தரங்கை தொடக்கிவைத்து ஆட்சியர் பேசியதாவது:
கடலூர் மாவட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து இதுபோன்ற கருத்தரங்குகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கக் கடலில் சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டதைக் கூட தகவல் தொழில்நுட்பம் மூலம் உடனடியாக நாம் தெரிந்துக் கொண்டோம்.
தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியைப் போல எதிர்காலத்தில் விவசாயத்திலும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு, தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், தொழில் நெறி வழிகாட்டி கையேட்டை ஆட்சியர் வெளியிட்டார்.
மேலும், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில், உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத் துறை நல அமைப்பாளர் பு.விஜயகுமார், புனித வளனார் கல்லூரி செயலர் பீட்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


