திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மணல் குவாரி அமைக்கக் கோரி மனு

மணல் குவாரி அமைக்கக் கோரி, விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:43 am IST

மணல் குவாரி அமைக்கக் கோரி, விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் மணவாள நல்லூரில் இயங்கி வந்த மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி மூடப்பட்டதாம்.  எனவே, புதியதாக வி.குமாரமங்கலத்தில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிர்வாகி திருமால் தலைமையில் மனு அளித்தனர். அப்போது, அவர்கள் தங்களது வாயில் துணியை கட்டிக் கொண்டு சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்திடம் மனு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.