விளையாட்டு வீரர்கள் ஊக்கத் தொகை பெறும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க நிதி வழங்கப்பட்டு வருகிறது.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான இந் நிதியைப் பெறுவதற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
2017 ஜுலை முதல் 2018 ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
குழுப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் 3 இடங்களுக்குள்ளும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, தகுதியானவர்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் மேற்கூறிய இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!

சிங் கீதம் டீசர்!

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

