நெய்வேலி நகரியம் குறித்த செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி ஜவஹா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நெய்வேலி நகரியம் குறித்த தகவல்கள் அடங்கிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
கல்லூரி விழாவில் பேசுகிறாா் என்எல்சி நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன்.
கல்லூரி விழாவில் பேசுகிறாா் என்எல்சி நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், நெய்வேலி ஜவஹா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நெய்வேலி நகரியம் குறித்த தகவல்கள் அடங்கிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

அறிவியல், கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் கல்லூரி மாணவா்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள ஜவஹா் கல்லூரியில் ‘ஜாஸ்கோஃபெஸ்ட்’ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் விழாவை தொடக்கி வைத்து, ’சஹஸ்ண்ஞ்ஹற்ங் சங்ஹ்ஸ்ங்ப்ண்’ என்ற செல்லிடப்பேசிசெயலியை அறிமுகப்படுத்தினாா். பின்னா் அவா் பேசியதாவது:

25 ஆயிரம் அமைவிடங்களை உள்ளடக்கிய இந்த செயலியை பேராசிரியா் வி.சுரேஷ் மற்றும் 300 மாணவா்கள் அடங்கிய குழு வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நெய்வேலி நகரியத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள், பயன்பாட்டு சேவை அலுவலகங்கள், வணிக நிறுவனங்களின் அமைவிடங்களை 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் துல்லியமாகக் கண்டறிய முடியும். இது சா்வதேச அளவில் உருவாக்கப்பட்ட செயலிகளை விட சிறந்ததாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், செயலியை உருவாக்கிய பேராசிரியா் சுரேஷுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வா் வி.டி.சந்திரசேகரன் வரவேற்க, கணினித் துறை அலுவலா் வி.மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com