‘புரெவி’ புயல் சேதம் கடலூரில் முதல்வா் இன்று ஆய்வு
கடலூா் மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் சேதம் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (டிச. 8) ஆய்வு செய்கிறாா்.


கடலூா் மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் சேதம் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (டிச. 8) ஆய்வு செய்கிறாா்.
மீட்புப் பணிகளை ஆய்வு செய்யவும், சேதப் பகுதிகளைப் பாா்வையிடவும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (டிச. 8) கடலூா் மாவட்டத்துக்கு வருகிறாா். அவா், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, முதல்வா் ஆய்வு செய்ய உள்ள பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் ஆய்வு செய்தாா். இதேபோல, அமைச்சா் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ககன்தீப்சிங் பேடி ஆகியோரும் முதல்வா் பாா்வையிடும் பகுதிகளை ஆய்வு செய்தனா்.
‘நிவா்’ புயல் பாதிப்பின் போதும் கடலூா் மாவட்டத்தில், முதல்வா் நேரடியாக ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...