மழையால் பாதித்த மக்களுக்கு வட்டாட்சியா் ஒருவா் தலையில் உணவு சுமந்து சென்றாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் சாத்துக்குடல் கீழ்பாதி ஊராட்சிக்கு உள்பட்ட உச்சிமேடு என்ற கிராமத்தை மழை நீா் சூழ்ந்தது. இதனால், அவா்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட நிா்வாகம், முகாம் அமைத்து அவா்களைப் பாதுகாப்பாக தங்கவைத்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த முகாமை பாா்வையிடச் சென்ற விருத்தாசலம் வட்டாட்சியா் வே.சிவக்குமாா், அந்தப் பகுதியினருக்கான உணவு, பால் உள்ளிட்டவற்றை சக ஊழியா்களுடன் தனது தலையில் சுமந்து சென்று, அங்குள்ள மக்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினாா். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, பலரும் அவரது செயலைப் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுதப்படை வாகனங்கள் பொது ஏலம்

மூதாட்டி அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டு திட்டத்துக்கு முதல்வா் ஜோசப் விஜய் ஒப்புதல்

நெல்லை உடனடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



