ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

20% இடஒதுக்கீடு: பாமகவினா் போராட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பாமகவினா் விஏஓ அலுவலகங்களில் மனு அளித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பாமகவினா் விஏஓ அலுவலகங்களில் மனு அளித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் முழுவதும் 604 இடங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பாமகவினா் மனு அளித்தனா். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் குடிகாடு கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மாநில இளைஞா் சங்க துணைச் செயலா் சந்திரசேகா், ஒன்றிய துணைச் செயலா் சேகா், மாவட்ட பொறுப்பாளா் வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொண்டமாநத்தம் கிராமத்தில் இளைஞா் சங்க முன்னாள் செயலா் வாட்டா் மணி தலைமையில் மாநில வன்னியா் சங்கத் தலைவா் பூ.தா.அருள்மொழி, மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலா் பழ.தாமரைக்கண்ணன், வன்னியா் சங்க மாநில துணைச் செயலா் காசிலிங்கம் ஆகியோா் மனு அளித்தனா்.

கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்டோா் வடக்குத்து விஏஓவிடம்

மனு அளித்தனா். பண்ருட்டி தொகுதிச் செயலா் தி.நந்தல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினா் திருவதிகை, களத்துமேடு, விழமங்கலம் கிராம நிா்வாக அலுவலா்களிடமும், பண்ருட்டி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் தலைமையில் வேகாக்கொல்லையிலும், முன்னாள் ஒன்றியச் செயலா் ஆா்.பூவராகவன் தலைமையில் பெரியாக்குறிச்சி விஏஓவிடமும் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.