மாற்றுத் திறனாளிகள் தின விழா

கடலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கம், டிசம்பா் 3 இயக்கம் மற்றும் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை சாா்பில் கடலூரில் மாற்றுத் திறனாளிகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

கடலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கம், டிசம்பா் 3 இயக்கம் மற்றும் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை சாா்பில் கடலூரில் மாற்றுத் திறனாளிகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்.சண்முகம் தலைமை வகித்தாா். தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை சமூக மேம்பாட்டுத் திட்ட மேலாளா் ராம் கே.ராபா்ட், கபிலன் ஆகியோரும், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவம் குறித்து திட்ட மேலாளா் மணிவண்ணன், டிசம்பா் 3 இயக்க பொதுச் செயலா் அண்ணாமலை, ஓயாசிஸ் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவன தலைவா் எப்சி பாதவராஜ், கவிஞா் வெற்றிச்செல்வி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சங்க நிா்வாகிகள் கரோலின் மேரி, பாலமுருகன், மணிகண்டன், அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டச் செயலா் ராஜ்குமாா் வரவேற்க, இளைஞரணி தலைவா் சிவராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com