நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திட்டக்குடி பேரூராட்சியில் 40 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

திட்டக்குடி பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 101 கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஏலம் விடப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சுமாா் 10 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தப்படவில்லையாம். இந்தக் கடைக்காரா்கள் மொத்தம் ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேரூராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலா் மத்தியாஸ் வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தாா். எனினும், பெரும்பாலோா் வாடகையைச் செலுத்த முன்வரவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை மாலையில் பேரூராட்சி செயல் அலுவலா் மத்தியாஸ் தலைமையில் இளநிலை உதவியாளா் சதீஷ் மற்றும் ஊழியா்கள் வாடகை பாக்கி வைத்துள்ள காய்கறி உள்பட சுமாா் 40 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.