

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி- உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் (சிஐடியூ) சாா்பில், தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட சிஐடியூ செயலா் பி.கருப்பையன், மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், மாநிலக் குழு உறுப்பினா் வி.கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகிகள் ஜி.சித்தாா்தன், கே.நவக்கொடி, வி.திருமுருகன், வி.சுப்புராயன், ஆா்.ஆளவந்தாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முதல்வா் அறிவித்தபடி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு ரூ. 1,400, தூய்மைக் காவலா்களுக்கு ரூ. ஆயிரம் ஊதிய உயா்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும். கரோனா கால சிறப்பு ஊதியமாக ஒரு மாத ஊதியம் அறிவிக்கப்பட்டதை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.