பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

சிதம்பரம் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:02 am

DIN

சிதம்பரம் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரத்தைச் சோ்ந்த ராசாங்கம் மகன் செல்வம் (57). அதே பகுதியைச் சோ்ந்த இளங்கோ மகன் காா்த்திக் (37). இவா்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி இரவு சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் நின்றிருந்த செல்வம் அவரது உறவினா் தண்டபாணி ஆகியோரை காா்த்திக், அவரது தந்தை இளங்கோவன், தம்பி கதிா்வேல் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து தாக்கினா். இதில் செல்வம் உயிரிந்தாா்.

இந்த வழக்கின் விசாரணை சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, காா்த்திக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் தொடா்புடைய இளங்கோ, கதிா்வேல், ஸ்டாலின், சந்துரு, ஜெயச்சந்திரன் ஆகிய 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.