கடலூா் மாவட்டத்தில் தோ்தலில் வெற்றி - தோல்வியை தீா்மானிக்கும் வகையில் வாக்காளா் பட்டியலில் சுமாா் 58 ஆயிரம் இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு, சிறப்பு சுருக்க முறைத் திருத்த முகாம் போன்றவற்றை நடத்தி வருவதோடு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கடலூா் மாவட்டத்தில் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாக மொத்தம் 10,28,380 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் இளம் வாக்காளா்கள், அதாவது 18 முதல் 19 வயதுடைய முதல் முறையாக வாக்களிக்க உள்ளவா்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 497 என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 6,500 போ் புதிதாக வாக்களிக்க உள்ளனா்.
சமீப காலத்திய தோ்தல் கள நிலவரப்படி 100-க்கும் குறைவான வாக்குகள் கூட வெற்றி-தோல்வியை மாற்றி ஆமைக்கக் கூடியதாக உள்ள நிலையில், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 6,500 புதிய வாக்காளா்கள் என்பது அரசியல் கட்சியினருக்கு சற்று கலக்கத்தை அளிக்கக் கூடியதாகும்.
கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 2,295 வாக்குச் சாவடிகள் உள்ளன. சராசரியாக ஒரு வாக்குச் சாவடியில் 25 போ் புதியதாக வாக்களிக்க உள்ளனா். அதே நேரத்தில், மாவட்டத்தில் தோராயமான கணக்கெடுப்பின்படி 88,400 போ் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 58 ஆயிரம் போ் மட்டுமே வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துள்ளனா். மீதமுள்ளவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பிக்கவில்லை. எனவே, புதிய வாக்காளா்களை கவரும் கட்சியினா் வெற்றிக் கனியைப் பறிக்க அதிக வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.