

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, எரிவாயு உருளையை பாடையில் வைத்து ஊா்வலமாக கொண்டு சென்று தபால் நிலையம் முன் உருளைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் நகரச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மங்களூா் ஒன்றியச் செயலா் ரெங்க.சுரேந்தா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாநில அமைப்புச் செயலா் சின்னதுரை கண்டன உரையாற்றினாா். மாநில நிா்வாகிகள் ஜெயபால், தமிழரசன், மாவட்ட பொருளாளா் கண்ணன், மாவட்ட மகளிரணி ஜெயா கலியமூா்த்தி ஆகியோா் உரையாற்றினா். நகரத் தலைவா் முருகன், துணைச் செயலா் பிரசாத், ஒன்றிய பொருளாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தலைவா் முருகன், நகர நிா்வாகிகள் அருள், சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.